மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் “மக்கள் திமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். மக்களின் வளர்ச்சி குறித்து சிந்திக்காத அரசாக திமுக இருக்கிறது. தனது வாரிசுகள் பற்றி மட்டுமே சிந்திப்பதை கடமையாக வைத்திருக்கும் முதல்வர் இந்த நாட்டிற்கு கிடைத்திருப்பது கவலையாக இருக்கிறது…..” என்ன பேசி உள்ளார்.