செகந்திராபாத் மற்றும் ராமநாதபுரம் இடையே இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செகந்திரபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும். அந்த ரயில் தொடர்ந்து பிப்ரவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

பின்னர் மறு மார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் பகல் 12.50 மணிக்கு செகந்திராபாத் வந்தடையும். மேலும் இந்த ரயில் தொடர்ந்து பிப்ரவரி 2, 10, 17, 14ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டை இன்று முதல் பெறலாம் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.