அரசியல்வாதிகள் காலில் இனி யாரும் விழுந்து கும்பிடக் கூடாது என மதிமுக தலைமை செயலாளர் துறை வைகோ தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஜாதி மதத்தை கடந்து மனிதநேயத்தால் ஒன்றிணைவோம் என்றார். அப்போது அவரின் கால்களில் விழுந்தவர்களை தூக்கி விட்டு இனி யாரும் அரசியல்வாதிகள் காலில் விழுந்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.