கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி திறப்பு தேதி தள்ளி போனதால், சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் (வாரத்தில் ஒருநாள் விடுமுறை கட்) என அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். ஒரு கல்வியாண்டில் 210 வேலைநாட்கள் இருக்க வேண்டும். ஆனால், வெயில் காரணமாக பள்ளி திறப்பு 14 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் அதீத மழையை பொறுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகக் கூடும். இதன்காரணமாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.