உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை  பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி பயனர்களின் பாதுகாப்புக்காக whatsapp நிறுவனம் தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது மற்ற வாடிக்கையாளர்கள் டிவைஸ் மூலமாக whatsapp அக்கவுண்டை லாகின் செய்யும்போது குறிப்பிட்ட நபரின் சாட் மட்டும் பார்க்க முடியாமல் லாக் செய்யலாம்.

இதற்காக whatsapp நிறுவனம் சீக்ரெட் கோடு என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது . இதனால் உங்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும். குறிப்பிட்ட நபர்களின் சேட்டை மட்டும் சீக்ரெட் கோடு வைத்து லாக் செய்து கொள்ள முடியும். தற்போதைக்கு இந்த சூப்பர் அப்டேட் whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது