இந்தியாவில் சமீபகாலமாக சர்வதேச எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால்கள் whatsapp பயனர்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பல பயனர்கள் வணிக கணக்குகளாக பதிவு செய்யப்பட்ட எண்களில் இருந்து தவறவிட்ட அழைப்புகள் செய்திகளை பெறுகின்றனர்.

பயனாளிகளின் பரவலான புகார்களை அடுத்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல பயனர்களுக்கு whatsapp பெரும் தொல்லையாக மாறி உள்ள நிலையில் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.