ரிசர்வ் வங்கி அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை வழங்கி வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினத்தை சேர்த்து மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திற்கு மட்டும் ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதில் இன்றுடன் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை முடிவடை இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை பாக்கியிருக்கிறது. அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை அடுத்ததாக செப்டம்பர் 28ஆம் தேதி eid e milad காரணமாக தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த விடுமுறை தினத்தை அறிந்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.