தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். குறிப்பாக புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க மட்டும் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; இளைஞர்கள் அதிகளவில் தங்களின் பெயர்களை இணைக்க ஆர்வம் காட்டினர் என தெரிவித்தார்