அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடத்துவது குறித்து தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா மாநில அளவிலான போட்டிகள் சேலத்தில் நவம்பர் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

எனவே மாவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை இந்த போட்டியில் பங்கேற்க வைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி போட்டிகளில் சிறந்த முறையில் நடத்தி முடிக்க தேவையான பணிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..