தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க வீட்டு வசதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.