மீன் உணவை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் மீனவர்கள் மேலும் பயனடைவார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன் பிடித்தல் என்பது 1.07% பங்களிக்கிறது” என கூறியுள்ளார்.