தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் எட்டாவது தெருவில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரமாக ராஜ்குமார் செல்போனில் பேசி க்கொண்டிருந்தார். அப்போது அந்த தெருவில் தருவைகுளத்தை சேர்ந்த பேச்சுமுத்து என்பவர் நடந்து சென்றுள்ளார். அவரிடம் ராஜ்குமார் நீங்கள் யார் உங்களை இந்த தெருவில் நான் பார்த்ததே இல்லையே, இங்கு என்ன வேலை என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த பேச்சிமுத்து அப்பகுதியில் இருக்கும் தனது அண்ணன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ராஜ்குமாரின் மார்பில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அனீசுக்கும் கத்தி குத்து விழுந்தது. இதனால் காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.