கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. கடந்த 17-ஆம் தேதி நண்பர்களுடன் அருள் பாண்டியன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் அருள் பாண்டியனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சதீஷ்குமார் அருள் பாண்டியனை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் பாண்டியனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.