விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டணை பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கார்த்திகேயன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிருமியின் பெற்றோர் கடந்த 16-ஆம் தேதி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மற்றொரு மாணவியும் கார்த்திகேயன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை தேடி வந்தனர். அதன் பிறகு கடந்த 18-ஆம் தேதி கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.