உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவிலேயே தங்கத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரண தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாய் என வரலாற்று உச்சத்தை எட்டி உள்ளது.

பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை, உலகளாவிய பணவீக்கம், முதலீடு பார்வை, பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றன. இனிவரும் நாட்களில் தங்கம் விலை மட்டுமல்லாது வெள்ளியின் விளையும் புதிய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.