ஆபரண தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 49 ஆயிரத்தை கடந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 79. 20 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 79 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இனி ஏழை எளிய மக்கள் தங்க நகையை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.