பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார். அந்த புகைபடம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் வந்தே பாரத் ரயிலுக்குள் சாப்பிட்டு மிச்சம் இருந்த உணவு பொட்டலங்கள், கேரி பைகள் மற்றும் காலி தண்ணீர் பாட்டில்கள் போன்றவை சிதறி கிடப்பதை ஊழியர்கள் சுத்தப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கும் ரயில் பெட்டிகளை பயன்படுத்துபவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் இதுபோன்ற முறையில் செயல்படுகின்றனர் என பலரும் கண்டனத்தை பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக புகைப்படத்தில் குறிப்பிடப்பட்ட வந்தே பாரத் எங்கிருந்து எந்த மாநிலத்திற்கு இயக்கப்படுகிறது என்கின்ற விவரம் தெரியவில்லை.