இந்தியாவில் தற்போது வங்கிகளை விட மக்கள் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை அதிகம் விரும்புகின்றனர். அதனால் தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதில் அஞ்சல் துறை கிசான் விகாஸ் பத்ரா திட்டம் அதிக பலன்களை தருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகை அப்படியே இரட்டிப்பாகும். இதில் வட்டிக்கு வட்டி பலன் கிடைக்கும்.

முதலீடு செய்வோர் தங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். மேலும் இந்தத் திட்டத்திற்கு 7 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் கிடையாது. இதில் கூட்டு கணக்கு தொடங்கியும் நீங்கள் முதலீடு செய்யலாம். அது மட்டுமல்லாமல் இதில் நாமினி வசதியும் உங்களுக்கு உள்ளது. பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் தங்களுடைய பெயரிலும் கணக்கு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.