இந்தியாவில் தற்போது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம் சிலிண்டர் விலையை குறைப்பதற்காக மத்திய அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சிலிண்டரை பெறுவதற்கு முன்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதாகி விட்டது. தற்போது வாட்ஸ் அப் மூலமாகவும் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அப்படி செய்தால் புக்கிங் செய்த 15 நிமிடத்தில் உங்க வீடு தேடி சிலிண்டர் வந்து சேரும். இதற்கு முதலில் வாடிக்கையாளர் சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனத்தின் என்னை வாட்ஸ் அப்பில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த எண்ணுக்கு HI என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். அடுத்ததாக வரும் செய்தியில் சிலிண்டர் விருப்பத்தை தேர்வு செய்து பதிவு செய்யலாம். பின்னர் 15 நிமிடத்தில் உங்களுக்கு சிலிண்டர் வந்து சேரும்