சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பாக காரைக்குடி வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ஜெயம் கொண்டான் வரவேற்றுப் பேசியுள்ளார். மேலும் ஆடிட்டர் திருப்பதி போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆறுமெய்யாண்டவர், தமிழ் மதி நாகராசன் ஆசிரியர் செல்வகுமார் ஆசிரியை அறிவுச்செல்வி சங்கரதாஸ் போன்றோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இதில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை, கதை, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.