நாடு முழுவதும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 15-ஆவது தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை பணம் எப்போது வரும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 16-வது தவணையை பெற வேண்டுமானால், பி.எம்.கிசான் வெப்சைட்டில் விவசாயிகள் தங்களது ஆதார் நம்பரை உறுதி செய்ய வேண்டும். அதற்கு இன்று கடைசி தேதி.