பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி பேரணியில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டா நகரில் நடைபெற்ற இந்த பேரணியில், கட்சியினர் கட்சிக் கொடியை ஏந்தியபடி பைக்கில் ஊர்வலம் சென்றனர். அப்போது திடீரென குண்டுவெடித்ததில், 3 தொண்டர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேர்தல் நெருங்கும் சூழலில், குண்டுவெடிப்பு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது