தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மக்களுக்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆனால் ஜனவரி 14ஆம் தேதி ஞாயிறு, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் என்பதால் முன்னதாகவே ஜனவரி 12 அல்லது 13 ஆகிய தேதிகளில் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் மற்றும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என மொத்தமாக வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.