தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதே சமயம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஒரு வாரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.