சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை விஜய் தலைமையில் “லியோ” திரைப்பட வெற்றிவிழா நடைபெறுகிறது. இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டிக்கெட் உடன் ஆதாரை கட்டாயம் எடுத்து வர வேண்டும்; ஆதார் இல்லையென்றால் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக 6 ஆயிரம் பேருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.