மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அஞ்சனி கேவாட் என்ற 23 வயது இளைஞர் சிறுமிக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அஞ்சனி கேவாட் அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை அவரது கிராமத்திற்கு அருகே விட்டுவிட்டு சென்றுள்ளார் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்தவர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.