உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா சிகன்ட்ராவில் உள்ள ரெயின்போ அப்பார்ட்மெண்டில் காவலாளியாக பணிபுரிபவர் ஜெகதீஷ் பிரசாத் திவாரி. இவர் பணியில் இருந்த போது அந்த அப்பார்ட்மெண்டில் சி-8 பிளாக்கில் வசிக்கும் ஷர்மா என்பவரின் மனைவி அனிதா தனது மகனுடன் திவாரியிடம் வந்து தகராறு செய்துள்ளார்.

அவர் காவலாளி திவாரியிடம் லிஃப்ட் ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒரு கட்டத்தில் தொடப்பத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு அவரது மகனும் காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோவை காண