பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹசன்பூர் தொகுதி எம்ஏல்ஏவான தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். இந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.