ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்த காதர் பாஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவம் பார்ப்பதற்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்புலிபாக்கம் ஜங்ஷன் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் காதர் பாஷா, அகமது பாஷா, நபி பாஷா, அபிஷா, அமாஜி, ஆம்புலன்ஸ் டிரைவர் சிவா ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. டீசல் கசிவு காரணமாக ஆம்புலன்ஸ் தீப்பிடிப்பு எரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.