தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில் வேதமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் வேதமூர்த்தியும், சூர்யாவும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். மேலும் வேதமூர்த்திக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்?