லாரி ஓட்டுநர்களுக்கு இரவில் இலவச டீ வழங்க ஒடிசா போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் துகுனி சாஹு சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் இரவில் தூக்கமின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் தாபா மற்றும் ஹோட்டல்களில் இலவச டீ வழங்கி சிறிது நேரம் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 மாவட்டங்களில் லாரி டெர்மினல்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.