காதலித்து கைபிடித்த மனைவியே இப்படி ஒரு துரோகத்தைச் செய்வாள் என்று அந்த கணவன் கனவிலும் நினைக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்த அந்தப் பெண்ணின் மீது கணவனுக்குச் சந்தேகம் ஏற்பட, அவர் ரகசியமாக மனைவியைத் துரத்தினார். இந்த நிலையில், மனைவி தனது பழைய காதலனுடன் அலிகாரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கணவனுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகப் போலீசாருடன் அந்த ஹோட்டலுக்கு விரைந்த கணவன், அங்கிருந்த அறை எண் 302 (Room No. 302) கதவைத் தட்டினார்.
पत्नी होटल में आशिक संग रंगरेलिया मना रही थी. इतने में पति पहुंच गया. और अपनी पत्नी को रंगे हाथ पकड़ लिया. इसके बाद पुलिस बुलाई. फिर पुलिस पति, पत्नी और आशिक, तीनों को थाने लेकर आई. मामला यूपी के अलीगढ़ का है. pic.twitter.com/efUz6Mg85z
— Priya singh (@priyarajputlive) March 15, 2026
அந்த 302-வது அறையின் கதவு திறக்கப்பட்டபோது, உள்ளே தனது மனைவி கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த கோரமான காட்சியைக் கண்டு கணவன் நிலைகுலைந்து போனார். “என் மீது வரதட்சணை வழக்கு போட்டுவிட்டு, இங்கே ஜாலியாக இருக்கிறாயா?” என அவர் ஆவேசமாகக் கத்த, அந்த ஹோட்டல் வளாகமே போர்க்களமானது. கள்ளக்காதலனுடன் சிக்கிய அந்தப் பெண், தனது கணவனை ஏமாற்றிவிட்டுப் புதிய வாழ்க்கை வாழத் திட்டமிட்டது அம்பலமானது. தற்போது அந்த கள்ளக்காதல் ஜோடியைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் இணையதளத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது
