தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் qr கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சத்ரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டையை தொலைத்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறியவர் திமுக அரசு என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.