வேடிக்கைக்காக உலகிலேயே மிகக் காரமான மிளகாய்களில் ஒன்றான ‘நாகா மிளகாயை’ சாப்பிட்ட நபர் ஒருவர், அதன் தீவிர காரத்தன்மையைத் தாங்க முடியாமல் உடல் நடுங்கிப்போன அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஆரம்பத்தில் சாதாரணமாக நினைத்து அந்த மிளகாயைக் கடித்த அவர், சில நிமிடங்களிலேயே அதன் கோர முகத்தை உணர்ந்தார். காரத்தின் வேகம் தலைக்கு ஏறியதும், அவரது உடல் கட்டுப்பாடின்றி நடுங்கத் தொடங்கியதுடன், மூச்சு விடுவதற்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த விபரீத முயற்சியின் வீடியோ பார்ப்பவர்களை நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

“>

இதனால் நாகா மிளகாய் என்பது சாதாரண மிளகாய்களை விட பல நூறு மடங்கு அதிக காரத்தன்மை கொண்டது என்பதை அறியாமல், பொழுதுபோக்கிற்காகச் செய்யப்படும் இதுபோன்ற சவால்கள் உயிருக்கே ஆபத்தாய் முடியக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் வெறும் வியர்வையோடு நின்றுவிடாமல், உடலின் நரம்பு மண்டலத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு இந்த மிளகாய் அந்த நபரைத் திணறடித்துள்ளது. சமூக ஊடகங்களில் நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும், “விளையாட்டிற்கு கூட இதுபோன்ற ஆபத்தான காரியங்களைச் செய்யக்கூடாது” என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.