சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் இன்றுமேஇன்று(13ஆம் தேதி)சிறப்முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து வெளியான சுற்றறிக்கையில், 19 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவற்றினை மக்கள் இந்த முகாமில் செய்து கொள்ளலாம்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். இப்படியான முகாம்கள் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட இருக்கிறது.