ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று (ஜன.20ம் தேதி) குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் மொபைல் எண், பயோமெட்ரிக் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம். அதோடு, ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருட்கள் குறித்தும் புகார் அளிக்கலாம். வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.