நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றன. தற்போது அரியானா அரசாங்கம் ரேஷன் பொருட்களுடன் பணத்தையும் தருவது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் 250 ரூபாய் வழங்குவதாக அரியானா மாநில அரசு அறிவித்தது. தற்போது இந்த தொகை 300 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசின் இந்த மாற்று பலனை பிபிஎல் மற்றும் AAY கார்டுதாரர்கள் பெறுவார்கள். இதன் மூலம் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.