நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218 புகார்கள் பெறப்பட்டு 17,235 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் 8-வது பென்ஷன் அதாலத் முகாமினை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தற்போது டெல்லியில் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குறைகளை கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பென்ஷன் முகாம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடியோ வாயிலாக இணைக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.