தமிழகத்தில் மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பலரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர். அதற்கான மீட்பு பணிகள் தற்போது நடைபெற்ற வரும் நிலையில் அரசு மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் நிவாரணத் தொகையாக 15000 உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய், சேதமடைந்த குடிசைகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் என தற்போது உள்ள விலைவாசிக்கு ஏற்ப அனைத்து நிவாரண தொகையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்