திமுகவின் ஊழல் பட்டியல் வெளியிடுவதற்கு முன் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் பணியில் இருந்தபோது லஞ்சப்பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவின் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ நான் வைத்திருக்கிறேன். ரபேல் வாட்ச் பில்லை வெளியிட்டார். பில்லை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2வது வாட்ச் விற்பனை செய்யப்பட்டிருந்தது; மே 27ம் தேதி ரூ.3 லட்சத்துக்கு ரபேல் வாட்சை வாங்கினேன்; 2021 முதல் என் கையில் இருக்கும் ஒரே வாட்ச் இதுதான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், அரசியலில் எனக்கு மாதம் ரூ.7-8 லட்சம் மாதத்திற்கு செலவாகிறது. MBA படித்தபோது வாங்கிய ரூ. 11 லட்சம் கடனை 7 ஆண்டுகள் கட்டினேன் என்றார்.