ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெராக்ஸ் எடுக்க பணம் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும் பிச்சைக்காரர் கூட மூன்று ரூபாய் வாங்க மாட்டான் என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.