வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை வரும் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ அடையாள ஆவணம் தரவோ அவசியமில்லை. அதோடு பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நோட்டுக்களை மாற்றுவது குறித்த பணிகளை மேற்கொள்ளும்படி பாரத ஸ்டேட் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.