ஒடிசா புபனேஸ்வரை அடுத்த நிலாத்ரி விஹார் பகுதியில் வசித்து வருபவர் துர்கா பிரசாத் பட்நாயக். இவர் இந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நடுத்தர வசதிகொண்ட இவருடைய வீட்டின் மாதாந்திர மின்கட்டணம் ரூ. 700-ல் இருந்து 1,500 ரூபாய் என்ற அளவிலேயே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒடிசா மின்சாரத் துறை நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டர், துர்கா பிரசாத் பட்நாயக் வீட்டிலும் பொருத்தப்பட்டது.

இதனிடையே துர்கா பிரசாத் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் மே மாத மின்கட்டணத்தை செலுத்த ஆன்லைனில் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவருக்கு மே மாதாந்திர மின்கட்டணமாக 7 கோடியே 90 லட்சத்து 35 ஆயிரத்து 456 ரூபாய் பில் வந்து இருந்தது. ஆகவே ஸ்மார்ட் மீட்டரை விநியோகிக்கும் நிறுவனம் இதனை கருத்தில் கொண்டு முறையான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்கவேண்டும் என்று துர்கா பிரசாத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.