தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) கடன் உதவி திட்டம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பொதுக்கால கடன் திட்டம் மற்றும் தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான புதிய போர்க்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் வரை வழங்கப்படும். டாப்செட்கோ கடன் திட்டங்களில் விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிட்டுள்ளார்.