பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் பிக்பஜார், டி-மார்ட் போன்ற ரீட்டெயில் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது தற்போது பலரின் வழக்கமாக மாறிவிட்டது. ஆனால், அங்கே ஷாப்பிங் செய்யும்போது நாம் காட்டும் சிறு கவனக்குறைவு நமது பர்ஸை காலி செய்துவிடும் என்பதற்கு ஒரு நிகழ்வு சாட்சியாகியுள்ளது.
வழக்கம்போல டி-மார்ட் சென்ற பெண் ஒருவர், அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அதன் மீது விலை ரூ.149 என்று அச்சிடப்பட்டிருந்ததுடன், சலுகை விலையிலும் கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாதாரண விலைதான் என்று நினைத்து எங்குமே யோசிக்காமல் அதனைத் தன் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்தார். ஆனால், பில்லிங் கவுண்டருக்குச் சென்று கையில் பில்லை வாங்கியபோதுதான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு வழங்கப்பட்ட பில்லில் அதே தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.300 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே சந்தேகமடைந்த அவர், பாட்டிலின் மீது அச்சிடப்பட்டிருந்த விலையையும் பில் தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தார். இரண்டிற்கும் இடையே இவ்வளவு பெரிய வித்தியாசம் இருப்பதைப் பார்த்துப் பரிதவித்துப் போனார்.
பொருட்கள் எந்த விலைக்கு விற்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் இது போன்ற விலைச் முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே, பெரிய பல்பொருள் அங்காடிகளில் ஷாப்பிங் செய்யும்போது, அலமாரிகளில் ஒட்டப்பட்டுள்ள விலையை மட்டும் நம்பி பொருட்களை வாங்க வேண்டாம்.
My friend went shopping at D-Mart. There she liked a water bottle that had a price of ₹149 written on it and it was available on offer.
She thought the bottle would cost only ₹149, so she added it to her shopping cart without thinking much. But when she reached the billing… pic.twitter.com/d1cVx0A7pK
— ꫝɴᴜ (@GMTMemeMacvt) August 22, 2026
“>
பில் கவுண்டரில் பில் போடும்போது MRP விலை, ஆஃபர் விலை மற்றும் இறுதித் தொகை சரியாகப் பொருந்துகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும். உங்கள் மீதுள்ள இந்தக் சிறிய கவனம், எவ்விதக் காரணமும் இல்லாமல் உங்கள் பணம் வீணாவதைத் தடுத்துவிடும்.
