தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முகாம்கள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் அளிக்க தவறியவர்களுக்காக இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது கட்டத்துக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணி ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் முதல் கட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை 74.9 லட்சம் மகளிரின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.