குரூப் ஒன் பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்குகின்றது. சென்னையில் மற்றும் நடைபெற உள்ள இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட அனுமதி சீட்டுகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov in, www.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.