கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும் தனலட்சுமி மார்பில்ஸ் செரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனைப் போலவே செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்திலும், அருண் அசோசியேட் நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் அமலாக துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேலாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.