வருடம் தோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தை விட அதிக பதிவுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

இதனை கருத்தில் கொண்டு, அனைத்து சார்பதிவாளர் அலுவலங்களிலும் இன்று  கூடுதல் டோக்கன் தரப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.