பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக தினமும் சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும் இடையில் ஊழியர்கள் ஒரு சிலிண்டருக்கு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் கூடுதலாக 60 ரூபாய் வரை வசூல் செய்வதாக புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலிண்டர் எடுத்து வரும் ஊழியர்களிடம் ரசீதில் உள்ள தொகையைத் தவிர வாடிக்கையாளர்கள் கூடுதலாக பணம் தரக்கூடாது. சிலிண்டரை வீட்டு வாசலில் கட்டாயம் விநியோகம் செய்ய வேண்டும். கேஸ் ஏஜென்சிக்கு சென்ற சிலிண்டர் எடுக்கும்போது அதற்குரிய டெலிவரி தொகையை ஏஜென்சிகளிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சென்னை வாடிக்கையாளர்கள் ஏஜென்சிக்கு சென்று சிலிண்டர்களை எடுத்துக் கொள்ளும் போது அதற்கு உரிய 29.26 போக மீதித்தொகையை வழங்கினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.